முதல்வரின் நலத்திட்ட விழா: கூட்டம் இழந்த மதுரை

Tamil_News_large_1726239
மதுரையில் முதல்வர் கலந்து கொண்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கூட்டம் குறைவாக காணப்பட்டது. முதல்வராக பதவி ஏற்றுள்ள இடைப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நலத்திட்ட விழாவில் பங்குகொண்டு வருகிறார்.மதுரையிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழா இன்று (8-ம் தேதி)மாலை 5 மணிக்கு துவங்குவதாக இருந்தது. அமைச்சர்கள் பஸ்களில் கூட்டத்திற்கு ஆட்களை அழைத்து வந்தனர். இருப்பினும் எதிர்பார்த்த அளவிற்கு கூட்டம் கூடவில்லை. கூட்டம் கூடாதது. மற்றும் வெயில் காரணமாக விழா தாமதமாக துவங்கியது. விழாவில் கலந்து கொண்ட முதல்வர் எழுதி வைத்திருந்த உரையை வாசித்தார். உரையை வாசிக்கும் போது தடுமாறினார்.

Leave a Response