பணம் மோசடி வழக்கு: பவர் ஸ்டார் சீனிவாசன் போலீசிடம் சிக்கினர்!

Powerstar-Srinivasan-Stills-8
தமிழ் திரையுலக பிரபலமான பவர் ஸ்டார் சீனிவாசன் பண மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு இன்று காவல்துறையினரிடம் அகப்பட்டார்.ரூபாய் பத்து கோடி பணத்தை மோசடி செய்ததாக நடிகர் பவர் ஸ்டார் மீது காவல்துறையில் வழக்குப்பதிவாகியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் இன்று பவர் ஸ்டாரை கைது செய்தனர்.

நிறுவனம் ஒன்றில் ரூ.10 கோடி வாங்கிவிட்டு திருப்பி தரவில்லை என்ற புகாரின் அடிப்படையில் அவரை கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.ஏற்கெனவே, நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் டெல்லி குற்றப்பிரிவு காவல்துறையால் அறிவிக்கப்பட்ட குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ளார்.

Leave a Response