தன் ரத்தத்தை விப்பனை செய்த கல்லூரி மாணவர் கைது

Man-arrested-after-he-raped-a-neighbour’s-wife-as-revenge.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ரத்தம் விற்பனை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.ஜெய்ப்பூரில் உள்ள ஒரு மறுத்துவ மனையில் அவசரமாக ரத்தம் தேவைப்பட்ட நோயாளிக்கு ரூ.1000க்கு ரத்தம் விற்பனை செய்த கல்லூரி மாணவரை மோதி டூங்கிரி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இளைஞர் ஒருவர் ரூ.1000-க்கு ரத்த தானம் செய்வதாக கூறி சிலரிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவர் பெயர் உமேஷ் வயது (22) இந்த இளைஞர், டீ விற்பனையாளர் மூலம் ஒரு குடும்பத்திடம் அறிமுகம் செய்துவைக்கப்பட்டுள்ளார். அந்த குடும்பத்தினரிடம் 1 யூனிட் ரத்தம் ரூ.1000க்கு விற்பனை செய்ய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.இதுபோன்று ஏற்கனவே 2 பேரை மோதி டூங்கிரி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த பிப் 27ஆம் தேதி எஸ்எம்எஸ் மருத்துவமனைக்கு ரத்தம் விற்க வந்த இருவரை, இரண்டு செவிலியர்களின் உதவியால் காவல்துறையினர் கைது செய்தனர்.

Leave a Response