தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது வேதனையளிக்கிறது- மத்திய இணை அமைச்சர்!

fishermen

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதேபோல் மீனவர்களை தாக்கி இலங்கை கடற்படை விரட்டியடித்தும் வருகிறது.

 இது தொடர்பாக தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது வேதனைக்குரியது. இந்த விவகாரத்தில் நீண்டகால தீட்டத்துடன் பிரதமர் மோடி செயல்படுகிறார்.

ponradhakrishnan

கொச்சி கடற்படை தளத்தில் மீனவர்களுக்காக படகுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. தமிழக மீனவர் பிரச்சனைக்குத் தீர்வு காண இலங்கை கடற்படையை முடக்கி வைக்க வேண்டும்.

இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

Leave a Response