பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக மக்களுக்கு பரிசுத் தொகுப்பு அறிவித்துள்ளார்.
இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அரிசி குடும்ப அட்டைதாரர்கள், காவலர் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழர்கள் ஆகியோரின் குடும்பத்திற்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சக்கரை, ஏலக்காய், திராட்சை, முந்திரி, 2 அடி நீள கரும்புத்துண்டு ஆகியவை அடங்கிய சிறப்புப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்றும்,
இந்த பரிசுத் தொகுப்பு பொங்கலுக்கு முன்னதாக ரேசன் கடைகளில் வழங்கப்படும். இந்த பரிசுத் தொகுப்பின் மூலம் 1.80 கோடி மக்கள் பயன் பெறுவார்கள் என அறிவித்துள்ளார்.