தமிழ்கத்தில் தென் மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை மையம்

20140826_112307

தென் மாவட்டங்களில் 21, 22-ந் தேதிகளில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. அந்தமான் தெற்கு பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நகர்ந்து தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ளது.

வானிலை மைய அதிகாரிகள் கூறியதாவது:-

அந்தமான் தெற்கு பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நகர்ந்து தென் கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ளது. அதன் நிலை குறித்தும் அது எந்த திசை நோக்கி செல்கிறது என்றும் வானிலை மைய அதிகாரிகள் கண்காணித்து வருகிறோம். தமிழ்நாட்டில் நேற்று மழை எதுவும் பெய்யவில்லை. 21 மற்றும் 22-ந் தேதிகளில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழை பெய்யும். வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும்.

இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) தமிழகத்தில் வறண்ட வானிலை தான் நிலவும்.

என்று அவர்கள் கூறினார்கள்.


 

Leave a Response