காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை விடுமுறை


vardahவர்தா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்க கடலில் உருவாகியுள்ள ‛வர்தா’ புயல் சென்னையில் இருந்து, 350 கி.மீ., தூரத்தில் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் நாளை மதியம் சென்னை அருகே கரையை கடக்க கூடும். புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் 80 முதல் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நாளை திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


 

Tags:

Leave a Response