பாக்யராஜ் இயக்குனராக ரீ என்ட்ரி


maxresdefault-1நடிகர், இயக்குனராக 80, 90களில் பல்வேறு வெற்றி படங்களை தந்தவர் கே.பாக்யராஜ். தற்போது மீண்டும் புதிய படமொன்றை இயக்கவிருக்கிறார். இப்படத்தை நடிகர் பார்த்திபன் தயாரிக்கவுள்ளார்.

தன்னுடைய குருநாதர் கே பாக்யராஜை கௌரவிக்கும் வண்ணமாக, ‘சாதனை சல்யூட்’ விழாவை கடந்த 04.12.16 அன்று சென்னையில் நடத்தினார் பார்த்திபன். அதில் பேசிய பார்த்திபன், ’நான் தயாரிக்கும் அடுத்த படத்தை பாக்யராஜ் சார் தான் இயக்குகிறார்’ என்றார். இப்படத்தில் சாந்தனு ஹீரோவாக நடிக்கவுள்ளார் என்றும் கூறினார்.

இயக்குனர் மிஷ்கின் இயக்கும் புதிய படத்தில் வில்லனாக  நடிக்கவும் சம்மதித்திருக்கிறார் பாக்யராஜ். அடுத்த ஆண்டில் இயக்குனர், வில்லன் என இருதோற்றத்திலும் பாக்யராஜை எதிர்பார்க்கலாம்.


 

Leave a Response