முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்


1477803163-3455முதலமைச்சர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை கடந்த 6-ந்தேதி பதவியேற்றது.

ஓ.பன்னீர்செல்வம் உள்பட 31 பேர் அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளனர்.

இன்று அமைச்சர்கள் அனைவரும் தலைமை செயலகத்துக்கு வந்து தங்கள் பணியைத் தொடங்கினார்கள். காலை 10.30 மணி முதல் 12 மணி வரை ராகு காலமாக இருந்ததால், மதியத்துக்குப் பிறகே அமைச்சர்கள் வந்தனர்.

தலைமை செயலகத்துக்கு வரும் முன்பு ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று மரியாதை செய்து விட்டு வந்தனர்.

இந்த நிலையில் புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. கூட்டத்துக்கு முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை ஏற்க உள்ளார்.

இந்த கூட்டத்தில் பல்வேறு வி‌ஷயங்கள் குறித்து விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே நாளை நடக்கும் அமைச்சரவை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


 

Leave a Response