திருமணம் முடிந்த கையோடு மாலையும், கழுத்துமாக ஜெயலலிதாவுக்கு அஞ்சலி


00__largeதிருமணம் முடிந்த கையோடு ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினர்.

சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்த கார்த்திக் ஓட்டுநராக பயணியாற்றி வருகிறார். சிறுவயது முதலே அதிமுக மீதும், ஜெயலலிதா மீதும் தீவிர பற்றுக்கொண்டவர். ஜெயலலிதா இறந்த சோகத்தில் மூழ்கிய அவர், இன்று காலை திருமணம் முடிந்தவுடன் ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மனைவியுடன் அஞ்சலி செலுத்தினார்.

திருமணம் முடிந்தவுடன் மாலையும், கழுத்துமாக தம்பதியினர் அஞ்சலி செலுத்தியது அங்கு இருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


 

Leave a Response