பேச அனுமதித்தால் பூகம்பமே உண்டாகும்: ராகுல்காந்தி


70562பண மதிப்பிழப்பு விவகாரம் குறித்த விவாதத்திலிருந்து அரசு தப்பித்து ஓடுவதாகவும் ஒருவேளை இதுகுறித்து விவாதிக்க தங்களுக்கு அனுமதி தந்தால் பூகம்பமே உண்டாகும் எனவும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த மாதம் 16-ஆம் தேதி தொடங்கியது. அன்றிலிருந்தே ரூபாய் நோட்டு விவகாரத்தை எழுப்பி வரும் எதிர்க்கட்சிகள், இவ்விவகாரத்தில் வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டும். பிரதமர் மோடி எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஒவ்வொரு கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, பண மதிப்பிழப்பு விவகாரத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது எனவும் ஆனால் தன்னை இதுகுறித்து சொல்ல விடாமல் தடுப்பதாகவும் குற்றம் சாட்டினார். ஒருவேளை இதுகுறித்து விவாதிக்க தங்களுக்கு அனுமதி தந்தால் பூகம்பமே உண்டாகும் எனவும் ராகுல்காந்தி கூறினார்.


 

Leave a Response