ஜெயலலிதா மறைந்த அதிர்ச்சியில் தமிழகத்தில் பலர் மரணம்


sasikala-crying-jayalalithaa-body_650x400_61481004431முதல்வர் ஜெயலலிதா மறைந்ததை அடுத்து, தமிழகம் முழுவதும், அ.தி.மு.க.,வினர் பலர் அதிர்ச்சியில் உயிரிழந்து உள்ளனர். முதல்வர் ஜெயலலிதா, நேற்று முன்தினம் இரவு, 11:30 மணியளவில் உயிரிழந்தார்.

இச்செய்தியை அறிந்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் மூன்று பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் மாரடைப்பால் இறந்தனர். 24 வயது வாலிபர், நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். சேலத்தில், ஒரு பெண் உட்பட, நான்கு அ.தி.மு.க., தொண்டர்கள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நான்கு பெண்கள் உள்ளிட்ட எட்டு பேர், அதிர்ச்சியில் உயிரிழந்தனர்.

ஜெ., உயிரிழந்ததை ஒட்டி, நீலகிரி மாவட்டம், குன்னுாரில் நேற்று நடந்த மவுன ஊர்வலத்தில் பங்கேற்ற 61 வயது முதியவர் நெஞ்சு வலியில் உயிரிழந்தார். ஈரோடு மாவட்டத்தில், நான்கு பேர்,விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டுபேர், திருப்பூரில் நான்குபேர் இறந்தனர்.

பெரம்பலுார் மாவட்டத்தில், 55 வயது நபர், மதுவில் விஷம் கலந்து குடித்து, தற்கொலை செய்து கொண்டார். சென்னை, திருவொற்றியூரில், 61 வயது பெண், மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.


 

Leave a Response