ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலம் தொடங்கியது


cy_rvanuaaa_tysஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அதிகாலை முதலே பொதுமக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் ராஜாஜி அரங்கில் குவிந்துள்ளனர். மக்கள் கூட்டம் அதிகரிப்பதால் ராஜாஜி அரங்கில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா கலைஞர்கள் , முக்கிய பிரமுகர்கள், பொது மக்கள் என அனைவரும்  ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் ஜெயலலிதா உடல்  தங்க பேழையில் வைக்கபட்டு ராணுவ வண்டியில் ஏற்றபட்டது.பின்னர் இறுதி ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்தில் லட்சகணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.


 

Leave a Response