ஜெயலலிதா அவசரப் பிரிவில் இருந்து வார்டுக்கு மாற்றப்பட உள்ளார்: பொன்னையன்


Jayaram Jayalalithaமுதலமைச்சர்  ஜெயலலிதா அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து விரைவில் தனி வார்டுக்கு மாற்றப்படுவாதாக அதிமுக மூத்த தலைவர் சி. பொன்னையன் தெரிவித்துள்ளார்.

அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நுரையீரலில் ஏற்பட்டிருந்த தொற்று பாதிப்பு முழுவதும் சரியாகிவிட்டது. அபாய கட்டத்தை அவர் தாண்டிவிட்டார். செயற்கை சுவாசக் கருவியும் அகற்றப்பட உள்ளது என்று அதிமுக மூத்த தலைவரும், செய்தித் தொடர்பாளருமான பொன்னையன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு வாரமாக அவர் கஞ்சி போன்ற உணவுகளை உட்கொண்டு வருகிறார். தற்போது அவருடன் இருப்பவர்களுடன் ஜெயலலிதா பேசி வருகிறார் என்றும் கூறினார் பொன்னையன்.


 

Leave a Response