மீண்டும் இணையும் சுசீந்திரன்-விஷ்ணுவிஷால்…படம் பெயர் “மாவீரன் கிட்டு”:

Maaveeran Kittu
நல்லுசாமி பிக்சர்ஸ் மற்றும் ஏசியன் சினி கம்பைன்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் “மாவீரன் கிட்டு”. இப்படத்தினை சுசீந்திரன் இயக்க,விஷ்ணுவிஷால், பார்த்திபன், ஸ்ரீ திவ்யா மற்றும் சூரி இணைந்து நடிக்கிறார்கள். இப்படத்தின் ஆரம்பத்தை பற்றி இயக்குனர் சுசீந்திரன் பின்வருமாறு கூறியுள்ளார்.

“வெண்ணிலா கபடி குழு”, “நான் மகான் அல்ல”, “அழகர் சாமி குதிரை”, “பாண்டியநாடு”, “ஜீவா”, “பாயும் புலி”, போன்ற நல்ல வெற்றி படங்களை தந்த சுசீந்திரன் இப்படத்தை இயக்குகிறார். “வெண்ணிலா கபடி குழுவில் அறிமுகமான விஷ்ணுவிஷால் மீண்டும் இப்படம் மூலம் இணைகிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் பார்த்திபன், நாயகியாக ஸ்ரீ திவ்யா, சூரி நடிக்கிறார்கள். மற்ற நடிகர்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. இதன் படப்பிடிப்பு ஜூலை 15-ம் தேதி பழனியில் ஆரம்பமாகி தொடர்ந்து 50-நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும்.

இப்படத்தின் பெயர் ​”மாவீரன் கிட்டு” என்பதனால், இப்படத்தை ஈழ விடுதலை பற்றிய திரைப்படம் என்று என்ன வேண்டாம். 1985 காலகட்டத்தில் நம் தமிழகத்தில் மக்களின் உரிமைக்காக போராடிய ஒரு வீரனைப் பற்றிய திரைப்படம் தான் இந்த “மாவீரன் கிட்டு”.

படத்தின் இசையை D. இமான் அமைக்க, ஒளிப்பதிவை சூரியா கையாள்கிறார். படத்தின் வசனம் மற்றும் பாடல்களை யுகபாரதி எழுதுகிறார். படத்தொகுப்பினை காசி விஸ்வநாதன் மேற்கொள்கிறார். ஆர்ட் – சேகர், நடனம் – ஷோபி, தயாரிப்பு மேற்பார்வை​ – கருணாகரன். படத்தினை ஐஸ்வேர் கந்தசாமி, D.N.தாய்சரவணன் மற்றும் ராஜீவன் இனைந்து தயாரிக்கிறார்கள்.

Leave a Response