ராதிகாவின் காண்டம் கேள்விக்கு விஷாலின் அதிரடி பதில்..!

radhika vishal

பண்டிராஜ் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் கதகளி. இந்த படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த படத்தின் ட்ரைலரில் நாயகி கேத்தரின் தெரேசாவிடம் காண்டம் வேண்டுமா என விஷால் கேட்பதுபோல் வசனங்கள் இடம் பெற்றுள்ளது. இந்த வசனம் குறித்து நடிகை ராதிகா ட்விட்டரில் கருத்து தெரிவித்ததாவது, “ட்ரைலரில் காண்டம் கேட்பதை போல் வசனம் வருகின்றது. இது தவறில்லையா? என்னுடைய சிறிய வயது மகன் இது குறித்து என்னிடம் கேள்வி கேட்கிறான்.” என ட்விட் செய்திருந்தார்.

இன்று நடந்த கதகளி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில், நம் செய்தியாளர் விஷாலிடம், ராதிகாவின் ட்விட்டர் பற்றி கருத்து கேட்டார். அதற்கு விஷால் கூறியதாவது, “காண்டம் கேட்பது தவறு என்று சொல்லுவது எந்த விதத்தில் நியாயம் எனத் தெரியவில்லை. இதற்கு நான்  என்ன பதில் சொல்வது. அரசு மருத்துவமனைகளிலேயே கண்டம் கிடைக்கிறதே. காண்டம் உபயோகிப்பது பாதுகாப்பானது என விளம்பரங்கள் கூட வருகின்றதே! நான் அந்த வசனத்தில் கூறியது தவறாக படவில்லை” எனத் தெரிவித்தார்.

காண்டம் வசனம் தவறு எனக்கூறும் இதே ராதிகா தான், சிம்புவின் ஆபாச வார்த்தைகள் கொண்ட பீப் பாடல் தவறில்லை எனக் கூறியவர். ஆனால் விஷால் படத்தில் பேசிய காண்டம் வசனம் மட்டும் ராதிகாவிற்கு தவறாகப் பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்த நடிகர் சங்க தேர்தலில், விஷால் மீது ராதிகாவிற்கு ஏற்பட்ட கோபம் குறையவில்லை போல் தெரிகின்றது.

-Satheesh Srini

Leave a Response