எந்திரன்-2 ரஜினிக்கு மேக்கப்பா? பரபரப்பை கிளப்பிய ஷங்கர்..!

enthiran-2-shankar-rajini

மலேசியாவில் ஆர்ப்பரிக்கும் கூடங்களுக்கு நடுவில் விறுவிறுப்பாக கபாலி படப்பிடிப்பு நடந்துக்கொண்டிருக்கிறது. ரஜினியைவைத்து அட்டகத்தி ரஞ்சித் இந்தப்படத்தை இயக்குவதால் படத்திற்கு ஒரு பக்கம் எதிர்பார்ப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், இயக்குனர் ஷங்கர் மேலும் எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளார்.

லிங்காவை தொடர்ந்து எந்திரன்-2 படத்தில் ரஜினி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், திடீரென கபாலி படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டார். இதனால் எந்திரன் 2-வில் அமீர்கான், விக்ரம் நடிப்பதாக தகவல்கள் மாறி மாறி பரவிவந்தன. ஆனால் எல்லா செய்திகளையும் ஷங்கர் தரப்பில் இருந்து மறுக்கப்பட்டன. எதுவாக இருந்தாலும் நானே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன் அதுவரை எந்திரன்-2 பற்றிய செய்திகளை யாரும் நம்பவேண்டாம் எனக்கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், ‘எந்திரன் 2’ படத்திற்கான மேக்-அப் ஒத்திகை நடத்திக் கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இயக்குனர் ஷங்கரும், ஹாலிவுட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட பிரபலமான மேக்-அப்மேன் ஒருவரும் ரஜினியைப்போலவே தோற்றம் கொண்ட சிலருக்கு மேக்-அப் ஒத்திகை பார்ப்பதுள்ளனர். மேலும் அதில் தேர்வாகும் நபர் தான் ரஜினிக்கு டூப்பாகவும் நடிக்க உள்ளாராம். இப்படத்தை ‘லைக்கா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.

ஆனால் ஷங்கர் ரஜினுக்கு தான் மேக்கப் ஒத்திகை பார்த்ததாக முதலில் செய்திகள் பரவியதால், கோடம்பாக்கம் பரபரப்பானது. கூடிய விரைவில் எந்திரன்-2 பற்றிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. படத்தில் அர்னால்ட் வேறு நடிப்பதாக செய்திகள் கசிந்தன. எது உண்மை? எது பொய்? என்று அறிவிப்பு வெளிவந்தவுடன் அனைத்தும் தெரிந்துவிடும்.

satheesh srini

Leave a Response