திருப்பதியில் திருட்டு கல்யாணம்; சிக்கலில் சிக்கிய சந்தானம்..!

santhanam-ashna-zaveri-marriage

‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ ‘இனிமே இப்படிதான்’ படத்தில் நடிக்கும்போதே சந்தானமும் ஆஷ்னா சாவேரியும் காதலிப்பதாக வதந்திகள் பரவியது. இந்நிலையில் இன்று காலை முதலே நடிகர் சந்தானமும் நடிகை ஆஷ்னா சாவேரியும் திருப்பதியில் திருட்டுதனமாக திருமணம் செய்துகொண்டு விட்டதாகவும், மணக்கோலத்தில் திருப்பதியை வலம்வந்து கொண்டிருப்பதாகவும் இன்று திடீரென புகைப்படத்துடன் செய்திகள் பரவியது. இதுகுறித்து விசாரித்தபோது,

‘வாலிபராஜா’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் சந்தானம் கிட்டத்தட்ட படம் முடிவடையும்நிலையில் இருப்பதால், தனது அடுத்த படத்தின் பணிகளை இப்பொழுதே துவங்கிவிட்டார். அடுத்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் வழங்க, முதல் பிரதி அடிப்படையில் சந்தானம் தயாரிக்கிறார். ‘லொள்ளு சபா’ இயக்குநர் ராம்பாலா இப்படத்தின் மூலம் வெள்ளித்திரை இயக்குநராக அடியெடுத்து வைக்கின்றார். நவம்பர் 15ம் தேதி முதல் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. எப்போதுமே நாயகனாக ஒரு படம் ஆரம்பிக்கும் முன்பு திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்வது சந்தானம் வழக்கமாம்.

ஆனால் இந்த புகைப்படத்தை பரவவிட்டதே சந்தானம் தான் என தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் புரோமோசனுக்காக ஆஷ்னா சாவேரியுடன் இரண்டாவது திருமணம் செய்துவிட்டதாக புரளியை கிளப்பிவிட்டுள்ளாராம். ஆனால் இதை சந்தானம் மறுத்துள்ளார். பூஜை படத்தை தான் நண்பர்களுக்கு அனுப்பிவைத்தேன் அவர்கள் யாரோ தான் இப்படி விளையாட்டாக செய்துள்ளனர் எனத்தெரிவித்தார். யார் வெளியிட்டாலும் சிக்கலில் சிக்கியது சந்தானம் தான்.

satheesh srini

Leave a Response