ஷாருக்கானை பாகிஸ்தானிற்கு நாடுகடத்தவேண்டும் – பெண் சாமியாரின் பரபரப்பு பேச்சு..!

sharuk-samiyar

நடிகர் ஷாரூக் கானை, பாகிஸ்தானிற்கு நாடுகடத்த வேண்டும் என சாத்வி பிராச்சி என்ற பெண் சாமியார் கூறியுள்ளார்.

ஷாரூக் கான், நேற்று தனது 50வது பிறந்தநாளையொட்டி, தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தது டுவிட் செய்திருந்தார். அதில் நாட்டின் தற்போதைய நிலை குறித்தும் குறிப்பிட்டிருந்தார்.

ஷாரூக் கான் ட்விட்டரில் கூறியிருந்ததாவது, நாட்டில் தற்போது நிலவிவரும் மத ரீதியான சகிப்புத்தன்மையற்ற நிலை பெரும்கவலையளிக்கிறது. இந்நிலை தொடருமேயானால், முன்னணி நாடாக இந்தியா உருவாவதற்கு பெரும்தடைக்கற்களாக இருக்கும் என்று கூறியிருந்தார்.
ஷாரூக்கானின் இந்த கருத்து பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஷாரூக்கிற்கு பதிலளிக்கும்விதமாக பெண் சாமியார் சாத்வி பிராச்சி பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.

சாத்வி பிராச்சி கூறியுள்ளதாவது, ஷாரூக் கான், பாகிஸ்தான் நாட்டின் ஏஜென்ட் போன்று பேசுகிறார். சகிப்புத்தன்மை குறித்த அவரது கருத்திற்காக, அவர் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவரை பாகிஸ்தானிற்கு நாடு கடத்த வேண்டும். மத்திய அரசு அவருக்கு வழங்கியுள்ள பத்மஸ்ரீ விருதை, ஷாரூக் கான் திருப்பியளிக்க வேண்டும் என்று சாத்வி கூறியுள்ளார். இது மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Leave a Response