“ஒரு படத்திற்காக ஒன்பது படங்களை ஒதுக்கினேன்” – விக்ரம்

‘ஐ’ படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில் அதன் ஆடியோ ரிலீஸ் மற்றும் புரமோஷனால் நிகழ்ச்சிகளுக்கு வெளி மாநிலங்ககளுக்கு சென்று வந்துகொண்டு இருக்கிறார் சீயான். இந்தப்படத்தில் தனது கடின உழைப்புக்கு ஏற்ற வெகுமதி கிடைக்கும் என உறுதியாக நம்புகிறார். சமீபத்தில் கேரளாவில் நடந்த ‘ஐ’ புரமோஷனால் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விக்ரம் பேச்சிலும் அது வெளிப்பட்டது.

“‘ஐ’ படத்தில் நடிக்க ஒதுக்கிய நேரத்தில் நான் ஒன்பது படங்களில் நடித்திருக்கலாம்.. ஆனால் எனக்கு எண்ணிக்கை முக்கியமல்ல.. தரம்.. அதைத்தான் நான் நம்புகிறேன்.. இனி வருங்காலத்திலும் எனது முயற்சி இப்படித்தான் இருக்கும்.. இந்தப்படத்தில் சுரேஷ்கோபி நடித்துள்ள கதாபாத்திரம் சவாலானது.. ஆனால் அந்த சஸ்பென்சை தியேட்டருக்கு சென்று அனுபவியுங்கள்” என விழாவில் பேசினார் விக்ரம்.