‘எண்ணி ஏழு நாளு’க்குப்பிறகு ‘சண்டக்கோழி-2..! லிங்குசாமியின் 2௦15 டைரி..!

பையா படத்தை தொடர்ந்து, கிட்டத்தட்ட எழு வருடங்களுக்குப்பின் கார்த்தியுடன் லிங்குசாமி மீண்டும் இணைந்துள்ள படம் தான் ‘எண்ணி ஏழு நாள்’. லிங்குசாமி டைரக்ஷனில் வெளியான ’பையா’ படத்தின் சூப்பர் டூப்பர் வெற்றியை அவ்வளவு சுலபமாக யாரும் மறந்துவிட முடியாது.

அதேபோல விஷாலுக்கு ஆக்ஷன் ஹீரோ இமேஜை ஏற்படுத்தி கொடுத்த படம் தான் லிங்குசாமியின் இயக்கத்தில் வெளியான ‘சண்டக்கோழி’. இந்த வெற்றிக்குப்பின் இருவரும் பல வருடங்கள் கழித்து மீண்டும் ‘சண்டக்கோழி-2’வில் இணைய இருக்கிறார்கள்..

2௦15ல் தனது முதல் புராஜெக்டாக கார்த்தி நடிக்கும் ‘எண்ணி ஏழு நாள்’ படத்தை இயக்கும் லிங்குசாமியின் அடுத்த டார்கெட் சண்டக்கோழி-2 தான்… அஞ்சானில் சரிந்த லிங்குவின் செல்வாக்கை கார்த்தியும் விஷாலும் நிரிர்த்துவார்கள் என்பது உறுதி..