த்ரிஷாவின் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக ஒரு செய்தி ஊடகங்களில் நேற்று மாலை பரபரப்பாய் வெடித்து கிளம்பியது. தயாரிப்பாளர் வருண்மணியன் தான் மாப்பிள்ளை எனவும் செனடாப் ரோட்டில் உள்ள த்ரிஷாவின் வீட்டில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது எனவும் செய்தி தீ போல பரவியது.
அதற்கு எண்ணெய் ஊற்றும் வகையில் சம்பந்தப்பட்ட இருவரின் செல்போன்களும் தொடர்புகொள்ள முடியாத நிலையில் இருந்தன. ஆனால் நேற்று இரவு த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த நிச்சயதார்த்த செய்தி உண்மையில்லை என்றும், அப்படி தனது திருமணம் நிச்சயிக்கப்பட்டால் முதலில் பத்தரிகையாளர்களுக்குத்தான் தகவல் தருவேன் என்றும் மறுப்பு தெரிவித்துள்ளார்.