“நான் தேசியவிருது வாங்கிருக்கேன்.. நீ வாங்கிருக்கியா..?” – தனுஷ் போட்ட ஷட்டர்..!

சில நேரங்களில் ஷூட்டிங்ஸ்பாட்டில் ஹீரோ, ஹீரோயினுக்குள் நடக்கும் செல்லமான சண்டைகள், போட்டிகள் இருவரையும் காயப்படுத்தாத வகையில் சுவராஸ்யமானதாக இருக்கும். வி.ஐ.பி’ படத்தில் அமலாபால் தனுஷ் பைக்கை பார்த்து டப்பா வண்டி என்றதும் தனுஷ் அதற்கு பதிலாக பேசும் வசனத்தைப்போல ‘அனேகன்’ செட்டிலும் அவரிடம் வாயை கொடுத்து மாட்டிக்கொண்டாராம் கதாநாயகி அமிரா தஸ்தூர்.

அப்படி என்ன சொன்னாராம்..? இதோ அமிரா சொல்வதை கேட்போம்..“ பொதுவாகவே எனக்கு போட்டி மனப்பான்மை உண்டு.. அதனால் நானும் தனுஷும் ஒவ்வொரு காட்சியிலும் நடித்து முடித்ததும், நான் அவரிடம் யார் நன்றாக பண்ணியது..? நான் தானே என்று கேட்பேன்.. ஒருமுறை அவரிடம் அப்படி கேட்டபோது டக்கென்று என் பக்கம் திரும்பி ஒரு லுக் விட்டவர், “நான் தேசியவிருது வாங்கிருக்கேன்.. நீ வாங்கிருக்கியா?” என கேட்டார் பாருங்கள்..

என்ன பதிலை நான் சொல்வது….? நான் தான் தேசியவிருது வாங்கவில்லையே.. அதனால் சில நொடிகள் யோசித்து, “சார்.. உங்களுக்கு வயசு 30.. எனக்கு இப்பத்தானே 21 ஆகுது.. எனக்கு இன்னும் காலம் இருக்கு இல்லையா?” என கேட்டு ஜஸ்ட் லைக் தட்.. எஸ்கேப் ஆகிவிட்டேன்” என்கிறார் அடக்கமுடியாத சிரிப்புடன்..