ரவி கே.சந்திரன் மீது ‘யான்’ தயாரிப்பாளர்கள் புகார்..!

கடந்த மாதம் ரவி கே.சந்திரன் இயக்கத்தில் ஜீவா, துளசி நடிப்பில் வெளியான ‘யான்’ படம் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை.. இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் தரப்பு, ஹாலிவுட் படத்தின் கதை மற்றும் காட்சியமைப்புகளை காப்பியடித்து ‘யான்’ படத்தில் வைத்துவிட்டதாக இயக்குனர் ரவி கே.சந்திரன் மீது குற்றப்பத்திரிகை வாசித்துள்ளர்கள்..

ஹாலிவுட் ஸ்டுடியோ தயாரித்துள்ள மிட்நைட் எக்ஸ்பிரஸ் படத்தின் கதையைத்தான் தன்னுடையது என்று சொல்லி ‘யான்’ படமாக இயக்கியுள்ளாராம் ரவி கே.சந்திரன். இந்த உண்மையை யூடியூப் இணையதளத்தின் வழியாக சிலர் வீடியோவாகவே வெளியிட்டுள்ளனர்..

ஏற்கனவே படம் சரியாக ஓடாமல் நட்டம் ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது சம்பந்தப்பட்ட ஹாலிவுட் பட தயாரிப்பாளர்களிடம் இருந்தோ, அல்லது அதன் கதாசிரியரிடம் இருந்தோ தங்களது தயாரிப்பு நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டால் என்ன செய்வது என கவலையில் இருக்கிறார்கள்..

“ரவி கே.சந்திரன் மிகப்பெரிய ஒளிப்பதிவாளர்.. அமிதாப் பச்சன், ஷாருக்கான் படங்களில் எல்லாம் ஒளிப்பதிவு செய்தவர்.. அவர் இந்த கதையை முறைப்படி பதிவு செய்து வைத்துள்ளார் என்று கூறியதை நாங்கள் நம்பினோம்.. ஆனால் இன்று பண நட்டத்துடன் இப்போது வழக்கு தொடுக்கப்பட்டால் அதை எதிர்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் வேறு இருக்கிறோம்.. இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டுள்ளோம்” என அழுகாத குறையாக சொல்கிறார்கள் தயாரிப்பாளர் தரப்பில்.