பிரியாணி கொடுத்து சிவகார்த்திகேயனை அசத்திய பிரபு..!

ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிப்பவர்களுக்கு சுடச்சுட பிரியாணி செய்து பரிமாறுவதில் வல்லவர் அஜித். ஆனால் இளையதிலகம் பிரபுவின் ஸ்டைலோ தனி ரகம். அவர் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பு ஞாயிற்றுக்கிழமைகளில் நடந்தால் அவரது வீட்டிலிருந்து சூப்பர் பிரியாணி ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்துவிடும்.

இதுதான் தற்போது சிவகார்த்திகேயனுடன் அவர் இணைந்து நடித்துவரும் ‘காவல்காரன்’ படப்பிடிப்பிலும் நடந்ததாம். பிரபு வீட்டு பிரியாணியின் சுவையில் மயங்கிய சிவகார்த்திகேயனுக்கு டபுள் போனஸாக அவரது வீட்டிற்கும் ஒரு ஹாட்பாக்ஸில் பிரியாணி பார்சல் அனுப்பிவைத்தாரம்..

இதனால் பிரபுவுடன் தான் சேர்ந்து நடிக்கும் காட்சிகள் எல்லாம் பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமைகளில் வரும்படி பார்த்துக்கொள்ளுமாறு இயக்குனர் துரை செந்தில்குமாருக்கு அன்புக்கோரிக்கை வைக்கும் அளவுக்கு போய்விட்டாராம் சிவகார்த்திகேயன்.