தாய்க்கு கோவில்.. லாரன்ஸின் பிறந்தநாள் சபதம்..!

நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தனது பிறந்த நாளான நேற்று தனது தாய் கண்மணிக்காக கோயில் கட்ட தீர்மானித்து இருக்கிறார். அதற்காக தனது தந்தை ஊரான பூவிருந்தவல்லி அருகில் உள்ள மேவலூர் குப்பம் என்ற ஊரில் இடமும் தேர்வு செய்துள்ளார். இதற்காக அவரது தாயாரின் உருவச்சிலையை ராஜஸ்தான் மாநிலத்தில் வடிவமைக்கும் பணியை துவங்கி உள்ளார்.

“என் தாய் வாழும்போதே கோயில் கட்டி, பெருமைப்படுத்தவேண்டும் என்பதே எனது ஆசை. என் தாய் மட்டும் இல்லை என்றால் நான் எப்போதோ நான் இறந்த இடத்தில் புல் முளைத்திருக்கும்.. அவர் என்னை வளர்ப்பதற்காக பட்ட கஷ்டங்களை ஒரு புத்தகமாக எழுதி அடுத்த வருடம் எனது பிறந்தநாளன இதே தேதியில் அந்த கோயில் திறப்பு விழாவில் வெளியிட உள்ளேன்” என்று நெகிழ்கிறார் ராகவா லாரன்ஸ்.