தனுஷ் தயாரிப்பில் ‘எதிர் நீச்சல்’ படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் தற்போது மீண்டும் தனுஷ் தயாரிப்பிலேயே சிவகார்த்திகேயனை வைத்து டாணா(காவல்காரன்) என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படம் கிட்டத்தட்ட முடிவுறும் தறுவாயில் இருக்கிறது.
இதை தொடர்ந்து அடுத்த படத்தை தனுஷை வைத்தே இயக்கவுள்ளாராம் துரை செந்தில்குமார். ஆனால் படத்தை தயாரிப்பவர் தனுஷ் நடித்த ‘ஆடுகளம்’ படத்தை தயாரித்த கதிரேசன் தான். சமீபத்தில் இவர், தான் தயாரித்த ‘ஜிகர்தண்டா’ படத்தின் ரிலீசைக்கூட தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்திற்காக தள்ளிவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் தற்போது நடித்துவரும் ‘ஷமிதாப்’, ‘அனேகன்’ படங்களின் படப்பிடிப்பை முடித்துக்கொடுத்தபின் இந்தப்படத்திற்கான வேலைகள் தொடங்கும் என தெரிகிறது.