“விஜயகாந்த் நலமாக இருக்கிறார்.. வதந்திகளை நம்பாதீர்கள்” – மகன் புகைப்பட விளக்கம்..!

வதந்திகளை விட கொடியது வேறு எதுவுமில்லை.. அப்படித்தான் கேப்டன் விஜயகாந்த்திற்கும் உடல்நிலை சரியில்லை.. அவர் மருத்துவமனையில் இருக்கிறார் என வதந்திகளை கொளுத்திப்போட மிகப்பெரிய பரபரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அவரது மகன் விஜய பிரபாகருக்கு சமூக வலைதளத்திலும் தொலைபேசியிலும் தொடர்ந்து விசாரிப்புகள் வர நொந்துபோன அவர் உடனே தனது தந்தையுடன் இணைந்து ஒரு புகைப்படத்தை செல்பியாக எடுத்து தனது பேஸ்புக் பக்கத்தில் போட்டுள்ளார்.

மேலும் அவர் அதில், “எதற்காக இவ்வாறு வதந்திகளை பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை. சில நாட்களுக்கு முன்னரே அப்பா வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு போகிறார் என்று தகவல் கொடுத்திருந்தோம். ஆனால் நேற்று அப்பல்லோவில் நடந்தது என்ன? எதற்காக இவ்வளவு பத்திரிகையாளர் கூட்டம்..? பத்திரிக்கை நண்பர்களே.. நாங்களும் உங்களைப்போல சக மனிதர்கள் தானே…?

என் தந்தை நலமாகத்தான் இருக்கிறார். இது இந்த விஷயம் பற்றி நான் கேள்விப்பட்டதும் எனது தந்தையுடன் எடுத்த போட்டோ.. இது சில நாட்களுக்கு முன்னரே எடுத்த போட்டோ என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் அவர் இப்போது 3 தோசைகள் சாப்பிட்டுவிட்டு டைனிங் டேபிளை விட்டு இறங்கி வரும்போது சேர்ந்து எடுத்தது தான். போதுமா..? தயவுசெய்து இதுபோன்று வீண் வதந்திகளை பரப்பாதீர்கள்” என மன வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார் விஜய் பிரபாகர்.