தோள்பட்டை வலி குணமானது..! மீண்டும் படப்பிடிப்பில் ஆரி..!!

சமீபத்தில் வெளியான ‘நெடுஞ்சாலை’ படம் மூலம் தனது நடிப்பால் அனைவரின் கவனத்தை ஈர்த்தவர் அந்தப்படத்தின் கதாநாயகன் ஆரி. அதைத்தொடர்ந்து தற்போது நயன்தாராவுடன் இணைந்து ஒரு படத்தில் நடிப்பதற்கும் ஆரிக்கு வாய்ப்பு வந்துள்ளதாகவும் தெரிகிறது.

இதுதவிர தற்போது ‘கடை எண் 6’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் ஆரி. இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. இதில் சில நாட்களுக்கு முன் படப்பிடிப்பின்போது ஆரிக்கு தோள்பட்டையில் வலி ஏற்பட்டது. இதனால் சில நாட்கள் சிகிச்சையுடன் ஓய்வு எடுத்துவந்த ஆரி இப்போது மீண்டும் படப்பிடிப்பில் நடிக்க துவங்கி இருக்கிறார்.

இந்தப்படத்தை ஆர்.சசிதரன் இயக்குகிறார். இவர் ஏற்கனவே அட்டகத்தி தினேஷ், ஹரிப்ரியா ஆகியோரை வைத்து இயக்கியுள்ள ‘வாராயோ வெண்ணிலாவே’ படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.