ஸ்ரீகாந்த்தின் மனசாட்சி தான் சந்தானம் – ‘நம்பியார்’ ஹைலைட்ஸ்:

ஸ்ரீகாந்த் தயாரித்து நடித்துள்ள ‘நம்பியார்’ படத்தில் பல ஆச்சர்யங்கள் நமக்கு காத்திருக்கின்றன. இந்தப்படத்தில் ஆர்யா கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். எப்படிப்பட்ட நல்ல மனிதனுக்குள்ளும் ஒரு கெட்டவன் இருப்பான்.. அவனைத்தான் நம்பியாராக இந்தப்படத்தில் உருவகப்படுத்தி இருக்கிறார்கள்.

சொல்லப்போனால் சந்தானம் இந்தப்படத்தில் ஸ்ரீகாந்த்தின் நண்பனோ எதிரியோ அல்ல. ஸ்ரீகாந்த்தின் ஆழ்மனதில் கெட்டவனாக இருக்கும் கேரக்டர் தான் சந்தானம். அது அவ்வப்போது மனசாட்சி பேசுவதுபோல ஸ்ரீகாந்த்திடம் பேசி சண்டையிடுவது மாதிரி காட்சிகளை புதுமையாக அமைத்திருக்கிறார் இயக்குனர் கணேசா.

அதனாலேயே பல இடங்களில் ஸ்ரீகாந்த்தின் குரலுக்கு பதிலாக சந்தானத்தின் குரல் கேட்டால் குழம்பி விடாதீர்கள். மேலும் விஜய் ஆண்டனியின் இசையில் ‘ஆற அமர’ என்கிற பாடலையும் சந்தானம் பாடியுள்ளார்.