தடங்கல் இல்லாமல் படம் ஓட 6 தயாரிப்பாளர்கள் எடுத்த கூட்டு முயற்சி..!

ஏற்கனவே படங்களை தயாரித்தும் நல்ல படங்களை வாங்கி வெளியிட்டும் முன்னனியில் இருந்துவரும் தயாரிப்பு நிறுவனமான ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோகிரீன் நிறுவனம் தற்போது தமிழ்சினிமா மார்க்கெட்டிங் துறையில் ஒரு புதிய முயற்சியில் இறங்கியிருக்கிறது.

அதாவது தன்னுடன் இன்னும் ஐந்து தயாரிப்பாளர்களை தன்னுடன் சேர்த்து ‘ட்ரீம் பேக்டரி’ என்கிற புதிய நிறுவனத்தை உருவாக்கியுள்ளது. இதன்மூலம் திரைப்படங்களை தியேட்டருக்கு கொண்டுசெல்வதில் ஒரு புதிய வியாபார அணுகுமுறையை கையாள முடிவு செய்திருக்கிறது ஸ்டுடியோ கிரீன். இப்படி பல தயாரிப்பு நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து ஒரே நிறுவனத்தின் கீழ இயங்க தொடங்கியிருப்பது தமிழ்சினிமாவில் இதுதான் முதல்முறை..

இந்தக்கூட்டணியில் ஸ்டுடியோகிரீனுடன், சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டெர்டெயின்மென்ட்ஸ், சஷிகாந்த்தின் ஓய் நாட் ஸ்டுடியோ, எல்ரெட் குமாரின் ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட், அபினேஷின் அபி&அபி மற்றும் பிரின்ஸ் பிக்சர்ஸ் லக்ஷ்மண் குமார் ஆகியோரும் இணைந்துள்ளனர். அந்தவகையில் முதற்கட்டமாக தற்போது ‘சரபம், ‘மெட்ராஸ்’, ‘யான்’, ‘காவியத்தலைவன்’, ‘லூசியா’ ஆகிய படங்களை இந்த ‘ட்ரீம் பேக்டரி’கைப்பற்றியுள்ளது.