“பேன்ட் போடாமல் வந்துவிட்டார்” – வி.ஐ.பி சந்திப்பில் சுரபியை கலாய்த்த விவேக்..

தனுஷ், அமலாபால் நடித்துள்ள ‘வேலையில்லா பட்டதாரி’ படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. தனுஷ் தயாரித்துள்ள இந்தப்படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மதன் தமிழ்நாடெங்கும் வெளியிடுகிறார். இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று தாஜ் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த விழாவில் தனுஷ், அமலபால், சுரபி, விவேக். சரண்யா பொன்வண்ணன், சமுத்திரகனி, உட்பட இந்தப்படத்தின் தொழில்நுட்ப குழுவினர் கலந்துகொண்டு தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சுரபி பேன்ட் அணியாமல் முழங்காலுக்கும் சற்று மேலிருக்கும்படியான சட்டை மாதிரியான உடை ஒன்றை அணிந்து வந்திருந்தார். நிகழ்ச்சியில் பேசிய விவேக் சுரபி பற்றி பேசும்போது, “சுரபி வேலையில் டெடிகேஷன் உள்ளவர். ஷூட்டிங் ஸ்பாட்டில் கூட ‘ஷாட் ரெடி’ என்றதும் ஏதாவது வேலையிருந்தால் கூட அதை அப்படியே போட்டுவிட்டு வந்துவிடுவார்.. இப்போதுகூட இந்த விழாவுக்கு வரவேண்டும் என்று சொன்னதும் கூட அவசரத்தில் பேன்ட் போடாமல் கூட அப்படியே வந்துவிட்டார் போல இருக்கிறது” என்று கலாய்த்தார்.