மெரினா, தஞ்சை பெரியகோவில் பகுதிகளில் போலீஸ் குவிப்பு: விவசாயிகள் போராட்டம்…

police
விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சேப்பாக்கத்தில் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்ததாகவும், போராட்டத்திற்கு அனுமதி அளிக்காமல் போலீசார் தங்களை கைது செய்தால் நிர்வாண போராட்டம் நடத்தப் போவதாக விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு எச்சரித்திருந்தார்.

விவசாயிகள் போராட்டம் காரணமாக வாலாஜாபாத் சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக மேலும் பலர் கூடுவர் என்பதாலும், மெரினாவில் போராட்டம் நடத்த வாய்ப்பு உள்ளதாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

இதே போல் விவசாயிகளுக்காக போராட்டம் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் வேகமாக தகவல் பரவி வருவதால் தஞ்சை பெரியகோவிலை சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். விவசாய அமைப்புக்கள் போராட்டம் நடத்த உள்ளதாக வந்த தகவலால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Response