விதவை தாய்-மகளை பலாத்காரம் செய்த சப்-இன்ஸ்பெக்டரின் மகன் கைது…

rape
குர்கானில் விதவை தாய் மற்றும் அவரது 15 வயது மகளை கடந்த 3 வாரங்களாக பாலியல் பலாத்காரம் செய்து, ஆபாச படம் பிடித்து அவர்களை மிரட்டி வந்த சப்-இன்ஸ்பெக்டரின் மகன் கைது செய்யப்பட்டுளளார். பி.ஏ படித்து வரும் ஆசிஷ் குமார்(23), குர்கானில் தனது 11 வயது மகன் மற்றும் 15 வயது மகளுடன் வசித்து வரும் விதவை தாயை ராஜேந்திர பூங்கா மார்க்கெட்டில் கடந்த 25 நாட்களுக்கு முன்பாக சந்தித்துள்ளார். அதைத் தொடர்ந்து அவரது வீட்டிற்கு அடிக்கடி சென்ற ஆசிஷ், விதவை தாய் மற்றும் அவரது மகளிடம் தவறாக நடந்து கொண்டதையடுத்து, அந்த தாய் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை குர்கானில் உள்ள அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்த காவல்துறையினர் ஆசிஷை கைது செய்தனர். அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மொபைல்போனில் சுமார் 10-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்கள் இருந்ததாக தெரிவித்துள்ளனர்.

உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அப்பெண், கடந்த ஆண்டு தனது கணவரை இழந்து தற்போது, தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். அவரது மகள் அரசுப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். மார்க்கெட்டில் சந்தித்த குமார் மீது தவறான அபிப்ராயம் ஏதும் இல்லாததால் தனது வீட்டின் விலாசத்தை கொடுத்ததாகவும், அதன் பிறகு அவரது உண்மை முகம் தெரியவந்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் தனது புகாரில் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, மிரட்டல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட குற்ற பிரிவுகளின் கீழ் ஆசிஷ் குமார் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

Leave a Response