ஊடகவியாளர் சந்திப்பிற்கு வர பணம் கேட்டு மிரட்டிய நடிகை. நடவடிக்கை மேற்கொள்ளுமா திரைப்பட சங்கத்தினர்?

புதுமுக இயக்குனர் வி.எம்.மோகன் தயாரித்து இயக்கியுள்ள புதிய தமிழ் திரைப்படம் “புவனக்காடு”. இந்த திரைப்படத்தில் விக்னேஷ் கதாநாயகனாகவும், ஆந்திராவை சேர்ந்த திவ்யா நாகேஷ் கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் நிழகள் ரவி, அனுமோகன், பாண்டு, புதுமுக நடிகை ஆர்யா, புதுமுக குழந்தை நட்சத்திரம் குட்டி மலர் மற்றும் பலர் நடித்துள்ளனர். சரத் ப்ரியதேவ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் நாயகி திவ்யா நாகேஷ் விக்ரம் நடித்த “அந்நியன்”, அனுஷ்கா நடித்த “அருந்ததி” ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தற்போது “மதிகெட்டான் சாலை” மற்றும் “மேற்கு முகப்பேர் கனகதுர்கா” ஆகிய படங்களில் நடித்து கொண்டிருக்கிறார்.

“புவனக்காடு” திரைப்படத்தின் ஊடகவியாளர் சந்திப்பு நேற்று 24.டிசம்பர்.2013 சென்னை ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் நடைபெற்றது. இந்த ஊடகவியாளர் சந்திப்பிற்கு அப்படத்தின் தயாரிப்பாளர் & இயக்குனர் வி.எம்.மோகன், கதாநாயகன் விக்னேஷ், இசையமைப்பாளர் சரத் ப்ரியதேவ் மற்றும் பலர் கலந்துகொண்டனர். படத்தின் கதாநாயகி திவ்யா நாகேஷ் இந்த ஊடகவியாளர் சந்திப்பிற்கு வராமல் புறக்கணித்துள்ளார்.

இதை பற்றி அங்கு நாம் விசாரித்ததில், இந்த நடிகை படப்பிடிப்பின் போது ஒட்டுமொத்த படப்பிடிப்பு குழுவினருக்கும் பெரும் தொல்லை கொடுத்துள்ளார். காட்டில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது, அங்கு கிடைக்காத பழத்தின் பழச்சாறு, பிரியாணி மற்றும் பல கேட்டு படக்குழுவினரை இம்சை கொடுத்துள்ளதாக தகவல்.

படப்பிடிப்பில் அவ்வப்போது பணம் கேட்டு தயாரிப்பாளரை மிரட்டியுள்ளார். தயாரிப்பாளர் திரைப்படத்துறைக்கு புதுசு என்பதால் இந்த அராஜக கதாநாயகியின் மிரட்டல்களுக்கு அடிபணிந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்துகொள்ள, தயாரிப்பாளரிடம் மிரட்டி பணம் வாங்கி பின்னர் அந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டுள்ளார்.

நேற்று நடந்த ஊடகவியாளர் சந்திப்பில் கதாநாயகியை கலந்துக்கொள்ள தயாரிப்பாளர், இயக்குனர், கதாநாயகன் விக்னேஷ் மற்றும் “புவனக்காடு” படக்குழுவினர் பலர் அழைப்பு விடுத்துள்ளனர். இவர்கள் அனைவரின் அழைப்பையும் புறக்கணித்தார் மிரட்டல் நாயகி திவ்யா நாகேஷ். இந்த ஊடகவியாளர் சந்திப்பில் கலந்துக்கொள்ள, திவ்யா நாகேஷ் ரூபாய் பதினைந்தாயிரம் கேட்டுள்ளார். பணம் கொடுக்க தயாரிப்பாளர் மறுக்கவே திவ்யா நாகேஷ் நேற்றைய ஊடகவியாளர் சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை. ஆந்திராவை சேர்ந்த திவ்யா நாகேஷ் சென்னை அருகில் உள்ள ஊரப்பாக்கத்தில் குடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாதிரி மிரட்டல்களை திவ்யா நாகேஷை போல் வேறு சில நடிகர்கள், நடிகைகள் பணம் கேட்டு மிரட்டி, மற்றும் பல காரணங்களை சொல்லி மிரட்டுவதும், புறக்கணிப்பதும் வாடிக்கை ஆகியுள்ளது.

திரைப்பட விளம்பரம் மற்றும் அப்படத்தின் மேம்பாட்டிற்கு ஒத்து உழைக்காத மற்றும் திவ்யா நாகேஷ் போன்ற மிரட்டும் நடிகைகள் மீது தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்குனர்கள் சங்கம், FEFSI போன்ற அமைப்புகள் நடவடிக்கை மேற்கொண்டால் சிறு பட்ஜெட் திரைப்பட தயாரிப்பாளர்கள் மன உளைச்சல் மற்றும் பண நஷ்டமின்றி தப்பித்துகொள்ளலாம்.

மிரட்டல் திவ்யா நாகேஷ் மீது தமிழ் திரைப்பட சங்கத்தினர் என்ன நடவடிக்கை மேற்கொள்கிறார்கள் என்று பொறுத்திருந்து பார்போம்!!!
Vignesh - Divya nahesh (31)

Vignesh - Divya nahesh (35)

Vignesh - Divya nahesh (36)