பூனை புலியாக மாறும் கதை!!

DSC_0249

காயன்ஸ் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக வி.உமாமகேஸ்வரி தயாரிக்கும் படத்திற்கு “பூனை” (புலியாக மாறிய கதை) என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் விக்னேஷ் கதாநாயகனாக நடித்திருந்தாலும் இந்த படம் தான் என்னை கலையுலகில் நல்ல நடிகனாக, நட்சத்திர அந்தஸ்தை பெற்று தரும் என்ற நம்பிக்கையுடன் தான் இருப்பதாக விக்னேஷ் கூறுகிறார்.

கதாநாயகிகளாக தேவிகா மாதவன், சந்திரகலா இருவரும் நடிக்கிறார்கள். பாவா லட்சுமணன், செவ்வாளை, ஆதிசிவன் மற்றும் சுப்புராஜ் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – ரவி ஸ்ரீனிவாஸ், இசை – கார்த்திக் ராஜா. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ராம்கிரிஷ் மிர்னாலி.

படம் பற்றி இயக்குனர் யதார்த்தமான படமாக “பூனை” (புலியாக மாறிய கதை) உருவாகிறது. ஒருவன் தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்று வாழ்ந்து கொண்டிருக்கிற வேளையில் ஒரு குற்றவாளியாக தண்டனை பெறுகிறான். ஜெயிலிருந்து தப்பி வருகிற அவன் சந்திக்கிற சம்பவங்கள் திகிலூட்டும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்றுள்ளது. தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றார் இயக்குனர் ராம்கிரிஷ் மிர்னாலி.