சம்பளத்தால் நழுவிப்போன நாயகியின் படவாய்ப்பு!!

1424419_627611070613698_969726323_n

குறித்த நாட்களில், குறித்த நேரங்களில் படப்பிடிப்புக்கு சரியாக ஆஜராகி விடுவது, படத்தின் ப்ரோமோஷனுக்கு ஒத்துழைப்பு கொடுப்பது என சின்சியரான நடிகையாக இருந்து வருகிறார் பிரியா ஆனந்த். இதனாலேயே அவரை படத்துக்கு புக் பண்ண தயாரிப்பாளர்கள் வரிசையில் நின்றனர். இந்நிலையில் சம்பளத்தை உயர்த்தி கேட்டதால் பட வாய்ப்பை நழுவ விட்டதாக செய்திகள் வந்துள்ளன.

கொஞ்சம் கொஞ்சமாக சம்பளத்தை உயர்த்தி, இப்போது அரைக்கோடியை கேட்கிறாராம். சமீபத்தில் பிரபல இசையமைப்பாளர் நாயகனாக அறிமுகமாகும் புதிய படத்திற்காக நடிகையிடம் பேசியபோது, நடிகராக அவர் இப்போது புதுமுகம்தான். ஆனால் நான் வளர்ந்து விட்ட நடிகை என்று சொல்லி அதுவரை 40ல் இருந்த சம்பளத்தை தடாலடியாக 50 லட்சமாக்கியிருக்கிறார்.

அதைக்கேட்டு ஆடிப்போனவர்கள் வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட நாயகி ஸ்ரீதிவ்யாவை புக் பண்ணினார்களாம். இப்போதுதான் தமிழில் வளர்ந்து வரும் நடிகை என்பதால் சம்பளம் பற்றியே பேசாமல் ஒகே சொல்லியிருக்கிறார் அந்த நடிகை.