வீரம் படப்பிடிப்பில் ‘வாலி’ அஜித்!!

ajith

நாடோடிகள் படம் மூலம் அறிமுகமாகி பல்லாயிரக்கணக்கான தமிழ் ரசிகர்களின் பாராட்டை பெற்றவர் நடிகை அபிநயா. பிறவியிலேயே வாய் பேச முடியாத, காது கேளாதவராக இருந்தாலும், அந்தக் குறை சற்றும் தெரியாமல், மிகுந்த தன்னம்பிக்கையுடையவர் அவர்.

தற்போது அஜித் நடிப்பில் சிவா இயக்கி வரும் வீரம் படத்தில் விதார்த்துக்கு ஜோடியாக அபிநயா நடிக்கிறாராம். படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும், தன்னுடைய சிறப்பான நடிப்பால் அனைவரையும் கவர்கிறாம் அபிநயா. அபிநயாவின் நடிப்பைப் பார்த்து அசந்து போன அஜீத், இயக்குநரிடம் அவரது காட்சிகளை அதிகப்படுத்தும் படி வேண்டுகோள் விடுத்துள்ளாராம்.

மேலும் வாலி படத்தில் வாய் பேச முடியாதவராகவும், காது கேளாதவராகவும் நடித்த அஜித், அந்த அனுபவத்தின் மூலம் படப்பிடிப்பில் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் ‘வாலி’ பாஷையில் அபிநயாவுடன் பேசி நேரத்தைச் செலவிடுகிறாராம்