கெளதம், தரணிக்கு ‘ஓகே’. பாலாவுக்கு ‘நோ’ சொன்ன விக்ரம்!!

Vikram

தற்போது ஷங்கர் இயக்கும் ‘ஐ’ படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். இந்த படம் ஒன்றரை வருடங்களாக படப்பிடிப்பில் உள்ளது. இதனால் ரசிகர்களுக்காக அடுத்தடுத்து மூன்று படங்கள் கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார் விக்ரம். மேலும் அந்த படங்கள் தில், தூள் போன்று கமர்ஷியல் படங்களாக இருக்க வேண்டும் என்று உறுதியாக உள்ளார்.

அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘ராஜபாட்டை’, ‘தாண்டவம்’ வெற்றியை பெறாததால், தனது அடுத்த படங்களை மிகக் கவனமாக தேர்வு செய்து வருகிறார். இதனால் கௌதம் மேனன் மற்றும் தரணி இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இந்த நிலையில் பாலாவின் அடுத்த படத்தில் நடிக்க விக்ரமுக்கு அழைப்பு வந்தபோது, தற்போது கமர்ஷியல் படங்களில் மட்டுமே நடிக்க முடிவு செய்துள்ளதால், வருடத்திற்கு 3 படங்கள் நடிக்க முடிவு எடுத்திருப்பதால் உங்கள் படத்தில் நடிக்க முடியவில்லை என்று பாலாவிடம் கூறியுள்ளார் விக்ரம். இதனால் பாலா, அதர்வாவை வைத்து அடுத்த படத்தை இயக்குகிறார்.