“தலைவா”வுக்கு உதவிய முதல்வருக்கு நன்றி – விஜய்!

images11

தலைவா படம் குறித்து மீடியாக்களில் வந்த கட்டுக் கதைகளுக்கு பதிலடி தரும் விதமாக தலைவா படத்தை ரிலீஸ் செய்ய நடவடிக்கை எடுத்த மாண்புமிகு முதல்வருக்கு நன்றி என்று நடிகர் விஜய் சார்பில் அறிக்கை வெளியாகியுள்ளது.

விஜய் சார்பில் பிஆர்ஓ பிடி செல்வகுமார் அனுப்பியுள்ள அந்த அறிக்கையில், “தலைவா திரைப்படம் வரும் ஆகஸ்ட் 20ம் தேதி தமிழகமெங்கும் வெளியாகிறது. முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆகஸ்ட் 9-ம்தேதி வெளியாக வேண்டிய தலைவா திரைப்படம், சில அச்சுறுத்தல்கள் காரணமாக தியேட்டர்களில் திரையிட முடியவில்லை. கடந்த பத்து தினமாக, நான், தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது.

மீடியாக்களில் வந்த பல கட்டுக் கதைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, மாண்புமிகு முதல்வர் அவர்கள் இந்தப் பிரச்சினையில் தலையிட்டு, தலைவா திரைப்படம் சுமுகமாக வெளிவர நடவடிக்கை எடுத்துள்ளார்கள். இந்த திரைப்படத்தை ரசிகர்கள் குடும்பத்தோடு வந்து கண்டு ரசிக்கும்படி அன்புடன் கேட்டுகொள்கிறேன்” என்று நடிகர் விஜய் கூறியுள்ளார்.