திருத்தணிக்கு பின் திகார் போகும் பேரரசு!

perarasu

திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி, பழனி, திருவண்ணாமலை, போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய பேரரசு, அடுத்ததாக நவீன தொழில்நுட்பத்துடன் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் இயக்கும் படத்திற்கு “திகார்” என்று பெயரிட்டுள்ளார். காட்சன் பிலிம்ஸ் பட நிறுவனம் மிகப்பிரம்மாண்டமான முறையில் இந்த படத்தைத் தயாரிக்கிறார்கள்.

கதாநாயகனாக முகுந்தன் என்பவர் அறிமுகமாகிறார். கதாநயாகியாக மும்பை மாடல் அழகி அகன்ஷா பூரி அறிமுகமாகிறார். இன்னொரு நாயகனாக கார்த்திகேயன் நடிக்கிறார். ரியாஸ்கான், எம்.எஸ்.பாஸ்கர், பெரோஸ்கான், நியாமத் கான், மும்பை வில்லன் மற்றும் கே.சி. சங்கர் ஆகியோர் நடிக்கிறார்கள்.

சந்திரமுகி, சிவகாசி போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சேகர் வி. ஜோசப். ஒளிப்பதிவு செய்கிறார். இசை – ஷபீர். ஸ்டன்ட் – தீப்பொறி நித்யா. கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்குகிறார் பேரரசு.

படம் பற்றி இயக்குனர் பேரரசு கூறும்போது, “ஒரு காலத்தில் இந்த நாட்டையே கலக்கிக் கொண்டிருந்த மிகப் பெரிய தாதா அலெக்ஸண்டரின் மறைவுக்குப் பிறகு அவரது மகன் ஜோர்தன், இன்றைய சூழலில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தான் “திகார்”.

ஆக்ஷன் படம் என்றால் சாதாரணம். இது அதிரடி ஆக்ஷன் படம். இதற்காக பிலிம் சிட்டியில் 25 லட்ச ரூபாய் செலவில் மிகப் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு முகுந்தன் – ரியாஸ்கான் மோதும் பாக்சிங் சண்டைக்காட்சி படமானது. படப்பிடிப்பு துபாய், மும்பை, ஹைதராபாத், சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. திகார் வழக்கமான என் பாணி படம் இல்லை, பரபரப்பான ஆக்ஷன் படம்,” என்கிறார் பேரரசு.