அட்டகத்தி தினேஷ் நடிக்கும் ‘’வாராயோ வெண்ணிலாவே’’!

varayo vennilave

இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் நினைத்தது யாரோ என்ற படத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கும் அபிஷேக் பிலிம்ஸ் பட நிறுவன தயாரிப்பாளர்கள் ரமேஷ், இமானுவேல் இருவரும் தயாரிக்கும் படம் ’’வாராயோ வெண்ணிலாவே”.

கதாநாயகனாக அட்டகத்தி தினேஷ் நடிக்கிறார். கதாநாயகியாக ஹரிப்ரியா  நடிக்கிறார். இன்னொரு நாயகி தேர்வு நடைபெறுகிறது. சந்தானபாரதி, சரித்திரன், சோனியா, புதுமுகம் சரவணன் மற்றும் கானா பாலா ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு ; ராணா, இசை ; கார்த்திக் ராஜா, எழுதி இயக்குபவர் சசிதரன்.

படம் பற்றி இயக்குனர் சசிதரன் கூறும்போது, “வாராயோ வெண்ணிலாவே படம் கலகலப்பான காதல் கதை மட்டுமல்ல, வித்தியாசமான திரைக்கதையோட்டம்  உள்ள படமாகவும் இருக்கும். இப்படத்திற்காக சென்னை ஓல்டு உட்லண்ட்ஸ் ஹோட்டலில் 25 லட்சம் ரூபாய் செலவில் அரங்குகள் அமைக்கப்பட்டது. அதில் கல்லூரி மாணவர்கள் பாடும் விதமான

‘’ஐலேசா கடல்  நாங்கள்‘’

‘’ஆகாய திடல் நாங்கள்‘’

என்ற பாடல் காட்சி படமாக்கப்பட்டது. விரைவில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது” என்றார்.