தபால் நிலைய பின்னணியில் உருவாகும் படம் போத்தனூர் தபால் நிலையம்

இந்திய திரை உலகில் முதல்முறையாக, தபால் நிலைய பின்னணியில் உருவாகும் முதல் படம் இதுவாகும்.

‘Passion Studios’ நிறுவனம் தென்னிந்திய திரையுலகில் அனைவராலும் கொண்டாடப்படும் ஒரு தயாரிப்பு நிறுவனமாக விளங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ‘சீதக்காதி’, ‘அந்தகாரம்’, ‘என்னங்க சார் உங்க சட்டம்’ திரைப்படங்கள் எல்லோரிடமும் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிறுவனத்தின் சார்பில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு, “போத்தனூர் தபால் நிலையம்” என பெயரிட்டுள்ளனர். இயக்குநர் பிரவீன் இயக்கத்தில், Passion Studios சார்பில் சுதன் சுந்தரம் & G.ஜெயராம் இப்படத்தை தயாரிக்கின்றனர். மூன்று பாகங்கள் கொண்ட கதைகள் இணையும் சஸ்பென்ஸ், க்ரைம், விசாரணை திரில்லராக இப்படம் உருவாகவுள்ளது.

அறிமுக இயக்குநர் பிரவீன் இப்படத்தில் நாயகனாகவும் நடிக்கிறார். அஞ்சலி ராவ் நாயகியாக நடிக்கிறார். 75 க்கும் மேற்பட்ட புதுமுக நடிகர்கள் இப்படத்தில் முக்கியமான பாத்திரங்களில் நடிக்கின்றனர். அதில் பெரும்பாலானோர் கோயம்புத்தூரை சேர்ந்த தியேட்டர் ஆர்டிஸ்ட் நடிகர்கள்.

இயக்குநர் பிரவீன் அவர்கள் VFX மற்றும் அனிமேஷன் துறையில் 13 வருட அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. சில ஹாலிவுட் படங்களில் பணியாற்றியுள்ளார். ரஜினிகாந்த் அவர்களின் ‘கோச்சடையான்’ படத்தில் டெக்னிகல் இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

இதன் முதல் பாகம் 1990 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், போத்தனூர் தபால் நிலையம் பின்னணியில் கதை நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது.

1990-ம் ஆண்டின் காலகட்டத்தில் நடக்கும் கதையென்பதால், அக்காலத்தை திரையில் கொண்டு வர, கலை இயக்குநர் குழுவும், படக்குழுவும் மிகவும் கவனமுடன், நுணுக்கமான விவரங்களுடன், கடுமையாக உழைத்து வருகின்றனர்.

இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்துவிட்டது. விரைவில் முதல் பாகத்தினை படக்குழுவினர் வெளியிடவுள்ளனர். இரண்டாம் மற்றும் மூன்று பாகத்திற்கான படப்பிடிப்பை ஜனவரி 2022 ல் துவங்கி ஒரே கட்டமாக நடத்தவுள்ளனர்.

Leave a Response