ஜீ தமிழ் முதல் முறையாக நடத்தும் திரைப்பட விருது விழா

2008 இல் துவங்கப்பட்ட ZEE தமிழ், பல்வேறு புது முயற்சிகளை செய்து வெற்றிகரமாக இயங்கி வருகின்றது.மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற ZEE தமிழ் சமீபத்தில் zee தமிழ் குடும்ப விருதுகள் நிகழ்ச்சியை நடத்தியது. தற்போது புது முயற்சியாக ZEE தமிழ் சினி அவார்ட்ஸ் நிகழ்ச்சியை நடந்த உள்ளனர். திரையுலகத்தில் சிறந்த நட்சத்திரங்களை ஊக்கிவிக்கும் விதமாக அந்தந்த பிரிவுகளின் கீழ் தேர்ந்தெடுத்து விருது வழங்க உள்ளனர்.

இதற்காக zee தமிழ் 5 பேர் கொண்ட தேர்வு குழு ஒன்றை ஏற்பாடுசெய்துள்ளனர். இந்த தேர்வுக் குழுவில் சுஹாசினி மணிரத்னம், கெளதம் வாசுதேவ் மேனன், பரத் பாலா, பரத்வாஜ் ரங்கன், கரு பழனியப்பன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் .தேர்வு குழுவினர்களை, சுஜீ பிரபாகரன் மற்றும் தமிழ்தாசன் ஆகியோர் வரவேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, விழாவினை தொடங்கி வைத்தார்.

சுஜீ பிரபாகரன் பேசியதாவது, “zee தமிழ் துவங்கி 11 வருடங்களுக்கு மேல் ஆகியுள்ளது.பல புது முயற்சிகளை செய்துள்ளோம். தற்போது உங்கள் அனைவரின் ஆதரவோடு ZEE தமிழ் சினி அவார்ட்ஸ் நிகழ்ச்சியை தொடங்கி இருக்கிறோம். இதற்கு உறுதுணையாக இருக்கும் தேர்வு குழு நபர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என்று கூறினார்.

தமிழ் தாசன் பேசும்போது, “இந்தநாள் zee தமிழின் முக்கியமான நாள்.இந்த விழாவை நடத்த சென்ற வருடம் முயற்சித்தோம். ஆனால், தற்போது தான் இதை நடத்த முடிந்தது. திரைப்படத்திற்கும், தொலைக்காட்சிக்கு இடையே ஒரு பெரிய உறவை ஏற்படுத்தும் முயற்சியாக இந்த விருது விழா இருக்கிறது. மேலும் இன்னும் அதிக திரைப்படங்களை நாங்கள் ஊக்குவிக்க இருக்கிறோம்.அதன் தொடக்கமாக இந்த zee தமிழ் சினி அவார்ட்ஸ் நிகழ்ச்சியை துவங்குகிறோம்.இந்த விருதுகளுக்கான தேர்வுகள் மிகவும் நேர்மையாக நடைபெறும்” என்று பேசினார்.

கரு பழனியப்பன் பேசுகையில், “பல விருது விழாக்களில் கலந்துகொண்டுள்ளேன். இந்த zee தமிழ் சினி அவார்ட்ஸ் 2020 இல் கலந்துகொள்ள முக்கிய காரணம், நிர்வாகம் தலையிடாமல் நாங்கள் 5 பேர் மட்டும் சிறந்த படங்களை தேர்வு செய்வதற்கான உரிமையை வழங்கியதுதான்.தமிழ் சினிமாவின் பெருமை மற்ற மாநிலங்களிலும் இன்னும் அதிகம் தெரிய வைக்க எளிதாக அமைகிறது” என்று தெரிவித்தார்.

பரத் பாலா பேசும்போது, “இந்த விழாவிற்கும், தேர்வு குழுவிற்கும் என்னை இணைத்ததிற்கு நன்றி. இந்த விழாவை விருது வழங்கும் விழாவாக எண்ணாமல் திறமைக்கு தரும் அங்கீகாரம் என அனைவரும் என்ன வேண்டும். எதிர்காலத்தில் திரைப்படக் கலைஞர்கள் zee தமிழ் அவார்ட்ஸை எப்படியாவது பெற வேண்டும் என்ற எண்ணம் வரும் அளவுக்கு இந்த விருது வழங்கும் விழா இருக்க போகிறது” என்று கூறினார்.

கெளதம் வாசுதேவ் மேனன், “மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது இந்த தேர்வு குழுவில் இணைந்ததற்க்கு. இதன் மூலம் பார்க்காத திரைப்படங்களை பார்ப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கிறது. நேரம் இல்லாவிட்டாலும் அதற்கான நேரத்தை செலவிட்டு காண இருக்கிறேன்” என்று கூறினார்.

சுபாஷினி மணிரத்னம், “இந்த விருதுக்கான தரம் முதன்மையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.அந்த அளவு தேர்வுக்குழு அமைந்துள்ளது.என் அம்மா ZEE தமிழ் தொலைக்காட்சியை விரும்பி பார்த்து வருபவர். இந்த விருது விழாவில் நான் இணைந்ததை அறிந்த என் அம்மா மிகவும் மகிழ்ச்சியடைந்தார்” என்று தெரிவித்தார்.

நடிகர் கார்த்தி பேசும்போது, “ZEE தமிழுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். தேர்வுக்குழுவினர் மிகப்பெரிய பொறுப்பை எடுத்துள்ளனர். கடினமான வேலைதான். நிறைய படங்கள் பார்க்க வேண்டியிருக்கும். திரைத்துறையில் எல்லாருக்குமே விருது வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.பத்திரிக்கையில் வரும் சிறிய வார்த்தை கூட கலைஞர்களை உற்சாகப்படுத்தும் .அதற்கு தகுந்தாற்போல் இந்த நிகழ்ச்சி நடைபெறுவது சிறப்பு” என்று கூறினார்.

Leave a Response