ஒரு ஆழமான காதல் கதையை சொல்ல வருகிறது மழையில் நனைகிறேன்

ஆண்சன் பால், ரெபா மோனிகா ஜான் இணைந்து நடிக்கும் “மழையில் நனைகிறேன்” திரைப்படம் தலைப்பைப் போலவே கவிதை போன்ற காதலை சொல்லும் படமாக உருவாகி வருகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கே காதலர்களின் நெருக்கத்தை, அழுத்தி சொல்வதாய் அமைந்துள்ளது.
அறிமுக இயக்குநர் T. சுரேஷ் குமார் படம் குறித்து கூறுகையில்,
“இது மனதை இலகுவாக்கும் காதல் கதை. அதே நேரம் காதல் பற்றிய முதிர்வான கருத்துக்களை பேசும் படமாகவும் இது இருக்கும். படத்தில் வரும் ஒவ்வொரு கதாப்பாத்திரங்களும் சூழ்நிலையை முதிர்ச்சியான மனநிலையில் அணுகுவார்கள். வரலாறு முழுதும் தோல்வியடைந்த காதல் கதைகள் தான் வெகு பிரபலம். காதலர்கள் பிரிவதும், இறந்து போவதுமான காதல் கதைகள் வரலாற்றில் தொடர் வெற்றிக்கதைகளாக உலா வருகிறது. ஆனால், இப்படத்தில் ஒரு வித்தியாசமான முடிவை நீங்கள் பார்க்கலாம். திரையில் அந்த உணர்வுகளோடு கண்டுகளியுங்கள். உண்மையான காதலை, ஆண்சன் பால் மற்றும் ரெபா மோனிகா ஜான் தங்கள் அற்புத நடிப்பாற்றலால் வெளிப்படுத்தியுள்ளார்கள்” என்று கூறினார்.

B. ராஜேஷ் குமார் மற்றும் ஶ்ரீவித்யா ஆகியோர் ‘Rajsree ventures’ சார்பில் “மழையில் நனைகிறேன்” படத்தை தயாரிக்கிறார்கள். முன்னணி பாத்திரங்களில் ஆண்சன் பால், ரெபா மோனிகா ஜான் நடிக்க முக்கிய பாத்திரங்களில் ஷங்கர் குரு ராஜா, மேத்யூ வர்கீஸ், அனுபமா குமார், சுஜாதா பஞ்சு, வெற்றிவேல் ராஜா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
விஜி மற்றும் கெவின் பாண்டியன் வசனம் எழுதியுள்ளனர். விஷ்ணு பிரசாத் இசையமைக்க, லலிதானந்த் மற்றும் முத்தமிழ் பாடல்களை எழுதியுள்ளார்கள். இப்படத்தின் ஒளிப்பதிவை கல்யாண் பார்க்க, சண்டைப்பயிற்சியை ரமேஷ் கவனித்துக்கொள்கிறார்.

Leave a Response