கும்பாபிஷேகத்தை தலைமை தாங்கி நடத்திய சிவகுமார் குடும்பம்!

DSC_1187

சூலூர் காசி கவுண்டன் புதூரில் பரமசிவன் கோவில் கும்பாபிஷேக விழாவில் நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்திக் பங்கேற்றனர்.

கோவை சூளுரை அடுத்த காசிகவுண்டன்புதூர் நடிகர் சிவகுமாரின் சொந்த ஊர் ஆகும். இங்கு வேல்மூர்த்தி பரமசிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா ஜூன் 13 அன்று காலை 9.30 மணி அளவில் நடைபெற்றது.

இதற்கு நடிகர் சிவகுமார் தலைமை தாங்கினார். கும்பாபிஷேகத்தை கவுமார மடாலய குமரகுருபர சுவாமிகள் நடத்தினார். சிறப்பு பூஜை செய்யப்பட்ட புனிதநீர் கோபுர கலசம், மற்றும் கர்ப்பக கிரக கலசத்திற்கு ஊற்றப்பட்டு மகா தீபாராதனை நடத்தப்பட்டது.

விழாவில் நடிகர் சிவகுமார் அவரது மனைவி லட்சுமி, நடிகர்கள் சூர்யா, கார்த்திக் மற்றும் குடும்பத்தினர், முக்கிய பிரமுகர்கள், ஊர் பொதுமக்கள் உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.