கௌதம்-ஐ மகிழ வைத்த தனியார் அஞ்சல்!

photo (4)

இயக்குனர், தயாரிப்பாளர் கௌதம் வாசுதேவ மேனன் தயாரிப்பில் உருவாகியுள்ள தங்க மீன்கள் படத்துக்கு கிடைக்கும் எதிர்பார்ப்பை  தொடர்ந்து  தரமான வித்தியாசமான கதைகளை,  தகுதியான திறமையானவர்களை  தேர்ந்து எடுக்கும் கௌதம் வாசுதேவ மேனன் தனது அடுத்த தயாரிப்பாக ‘தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்’ திரைப்படத்தின் தயாரித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு என இரு மொழியில் தயாராகும் இந்த காதல் கலந்த நகைச்சுவை படத்தின் இயக்குனர் பிரபு தேவாவிடம் இணை இயக்குனராக பணியாற்றிய பிரேம்சாய் இயக்கி வருகிறார். ஹைதராபாத் நகரில் தொடர்ந்து நடைபெற்று வரும் படப்பிடிப்பால்  மிகவும் உற்சாகமாக உள்ளார் கௌதம்.

இந்த படத்தின் இயக்குனர் பிரேம்சாய் பற்றி தயாரிப்பாளர் கௌதம் கூறும்போது, ‘பிரேம்சாய்  என்னை மிகவும் கவர்ந்த திறைமையான இயக்குனர். எதையும் திட்டமிட்டு  நேர்த்தியுடன்  செயல் பட்டு வரும் அவருடைய தொழில் நேர்த்தி, தெளிவான சிந்தனை ,தன்னுடைய கதையின் மேல் அவர் வைத்திருக்கும் ஆழமான நம்பிக்கை ,மற்றும் எண்ணத்தையும் எழுத்தையும் படமாக்கும் திறமை என்னை மிகவும் கவர்ந்து உள்ளது என்றார்.

காதல் மற்றும் நகைச்சுவை கலந்த படங்களின் ஆஸ்தான நாயகன் ஜெய் நாயகனாக நடிக்க அவருக்கு இணையாக நடிக்கிறார் யாமி கௌதம். இவர்களுடன் சந்தானம், VTV கணேஷ், நாசர், அஷுடோஷ் ரானா மற்றும் தம்பி ராமையா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் rushes பார்த்த பின்னர் தான்  பிரபுதேவா யாமி கௌதமை தன்னுடைய ஹிந்தி படத்துக்கு நாயகியாக ஒப்பந்தம் செய்தார் என்பது குறிப்பிடதக்கது.

பின்னணி பாடகர் கார்த்திக்கின் இசை அமைப்பில் இப்படத்தின் பார் பாடல் ஒன்றுக்காக கோவாவில் இசைக் கோர்ப்பு நடந்தது. கொரியர் பாய் கல்யாண் என்ற தலைப்பில் நிதின் நடிப்பில் உருவாகும் இந்த படத்தின் தெலுங்கு பதிப்பும் ஏக எதிர்பார்ப்பை கூட்டி உள்ளது. அடுத்த மாதம் வெளிவர உள்ள தங்க மீன்கள் உடன் இப்படத்தின் teaser வெளியிட திட்டமிட்டு உள்ளனர் போட்டன் கதாஸ் நிறுவனத்தினர்.