தலைமுறைகள் தாண்டிய படம்!

969209_10151448115998309_1353679221_n

ஒரு குடும்பத்தின் மூன்று தலைமுறை நடிகர்கள் நாகேஸ்வரராவ், நாகார்ஜூனா மற்றும் நாக சைதன்யா ஆகியோர் புதிதாக உருவாகும் தெலுங்கு படம் ஒன்றில் சேர்ந்து நடிக்கின்றனர்.

நாகேஸ்வரராவ், அவருடைய மகன் நாகார்ஜுனா, பேரன் நாக சைதன்யா ஆகிய மூவரும் இணைந்து ‘மனம்’ என்ற புதிய தெலுங்குப் படத்தில் நடிக்கின்றனர்.

விக்ரம் குமார் இயக்கும் இப்படத்திற்கு அனூப் ரூபன்ஸ் இசையமைக்கிறார். நாக சைதன்யா ஜோடியாக சமந்தாவும், நாகார்ஜுனா ஜோடியாக ஸ்ரேயாவும் நடிக்கிறார்கள். அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப் படம் எளிமையாக நடந்த பூஜையுடன் தொடங்கியது.