வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் ஏடிஎம்களில் மக்கள் கூட்டம்..!

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் ஏடிஎம்களில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

வாராக் கடனை கணக்கு காட்டி வங்கிகள் நஷ்டத்தில் இயங்குவதாக ஊதிய உயர்வை குறைத்ததை கண்டித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்றும் நாளையும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்தனர்.

அதன்படி வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். இதன்காரணமாக வங்கி பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

போராட்டம் காரணமாக நாடு முழுவதும் 39 லட்சம் காசோலைகள், அதாவது 22 ஆயிரம் கோடி மதிப்பிலான காசோலை பரிவர்த்தனை முடங்கி போக வாய்ப்புள்ளது. தமிழகம் உள்பட தென்மாநிலத்தில் மட்டும் 12 லட்சம் காசோலைகள், அதாவது, 7,200 கோடி காசோலை பரிவர்த்தனை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அதே நேரத்தில் ஏடிஎம்மில் பணம் நிரப்ப ஊழியர்கள் இருக்க மாட்டார்கள் என்பதால் ஏடிஎம் சேவை கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக ஏடிஎம்களில் மக்கள் கூட்டம் அலை மோதி வருகிறது.

Leave a Response