சுயநலமின்றி போராடும் அனைவருக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துகொள்கிறேன்-நடிகர் சத்யராஜ்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுதிய நடிகர் சத்யராஜ் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் சுயநலமின்றி போராடும் அனைவருக்கும் தனது வணக்கத்தை தெரிவித்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைய வேண்டும் என்பதற்காக போராடும் போராட்ட களத்தில் இருக்கும் போராளிகள் நம்மை விட மிகவும்  உயர்ந்தவர்கள்.

அவர்களுடைய தியாகத்தையும், வீரத்தையும்  நான் வாழ்த்த முடியாது. ஆனால் போற்றமுடியும் வணங்கமுடியும் என்று நடிகர் சத்யராஜ் கூறினார். நடிகர் சத்யராஜ் இரு தினங்களுக்கு முன்பு இயக்குனர் பாரதிராஜாவுடன் இணைந்து தமிழர் கலை இயக்கிய பண்பாட்டு பேரவை என்ற அமைப்பை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

Leave a Response